வானம் பிளந்தது, சென்னை மிதந்தது
Photo Licensed under the Government Open Data License - India (GODL)
சென்னையில் அன்று வானம் பிளந்தது.
மாநகர வாழ்க்கை முற்றிலும் சிதைந்தது. தெருக்களில் வாகனங்கள்
மிதந்தன. விடாமல் நாட்கள் பெருமழை பொழிந்தது.
செய்கை நாகரீக நகரத்தின் செருக்கு ஒழிந்தது. இதைகண்ட இயற்கை கை
கொட்டி சிரித்தது.
இரண்டு மாடி மனைகளில் புகுந்தது மழை தண்ணீர். பல குடும்பங்களின்
கண்களில் வழிந்தது கண்ணீர்.
வேகமாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தியது வெள்ளத்தில் மிதந்த
அந்த வேளச்சேரி. கூவத்தில் வெள்ளம் கரை புரண்டு அடித்துச் சென்றது.
அதன் இரு கரைகளில் சேரி.
கூரையின் மேல் நின்று உணவுக்கு கூவியது ஒரு செல்வாக்கு குடும்பம். குடி
தண்ணீருக்கு தவித்துக் கதறியது ஒரு கூட்டுக் குடும்பம்.
சொகுசுக் கார்கள் இருந்தும் பயனில்லை வீதி கடக்க. ஆனால் மீனவர்களின்
மரப்படுகுகள் உதவியது கரை சேர்க்க.
கரைகளில் கண்மூடித்தனமாக கட்டடங்கள் அத்து மீறி தன உடலில் சேதம்
தாங்காது உடைந்து பழி தீர்த்தது ஏரி.
வெள்ளம் சூழ்ந்து தவித்தது வானளாவிய அடுக்குமாடி. மின்சாரம் இல்லாது
பல இடங்களில் தவித்து நின்றது, அடுக்கு மாடிகள். அதுதான் அவர்களின்
உயிர் நாடி.
குப்பை கூளம் அடைத்தது வெள்ளம் வடிய அதன் நாட்டம். எங்கு
பார்த்தாலும் தாருமாரான கட்டிடங்களின் கூட்டம். இதனால் தடுத்து நிறுத்தியது
வடிய மழை நீர் ஓட்டம்.
எதுவும் அறியாது நின்றது சென்னை. இதற்கு ஏது வழி? கட்சிகள் கூறுவது
காரணம், ஒருவர் மேல் ஒருவர் சாற்றும் பழி.
பீமாச்சார்
Comments
Post a Comment