சிதைந்த சிந்தனைகள்

 

நான் யார் என்ற கேள்வியை,

என் மனதை நானே கேட்டுக்கொண்டேன் பதில் 

"நீ ஒரு

எண்ணங்களை எண்ணத்தெறியாத எழுத்தாளன்,

சிற்பக்கலை கற்காத சிற்பி,

ஓவியம் வரையாத ஓவியன்,

மணல் மேடுகள் தெரியாத மாலுமி,

கலங்கரை காணாத கப்பலோட்டி,

ஆண்டவனை அறியாத அறிஞன்,

பக்தி என்னவென்று தெரியாத பக்தன்,

வழி தெரியாது நடக்கும் வழிப்போக்கன்,

கற்பனை அறியாத கவிஞன்,

சிந்திக்க தெரியாத சிந்தனையாளன்"

Comments

Popular posts from this blog

நான் யார்?

என் தாய்