எங்கயோ ஒலித்த ஒரு குரல்
பனிமலையில் பள்ளத்தில் படுத்து பட்டாளத்தில் எல்லையை பாதுகாக்கும் அவன் தன பால்மணம் மாறாத பாலகனை விட்டுப்பிரிந்த வருத்தத்தில் பகல் கனவுகண்டு , " விம்மி அழும் குரலா அது ?" தான் பாத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த சிசு பல நாட்கள் ஆகியும் பார்வையின்றி படித்திருக்கும் பரிதாபத்தை நோக்கி தாய் துக்கத்தில் " விம்மி அழும் குரலா அது ?" மூப்பும் நோயும் சேர்ந்து மூங்கில் கட்டிலில் படித்திருக்கும் ஏழை முருகன் தன மகன் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலையை எண்ணி " விம்மி அழும் குரலா அது ?" தான் உழுது விதைவிதைத்து , பயிரிட்டு , கதிர் முற்றித் தலை சாய்க்கும் வேளையில் , காற்றும் மழையும் சேர்ந்து வெள்ளப்பெருக்கில் வெறும் மண் வயலாக நிற்பதைப் பார்த்து உழவன் " விம்மி அழும் குரலா அது ?" பருவம் எய்தி பல வருடங்கள் கடந்திட்ட போதிலும் தன மகளுக்கு , மணம் முடிக்கப் பணம் தேடி , தவிக்கும் மூப்புத் தந்தையின் " விம்மி அழும் குரலா அது ?" நாத்து நடச்சென்ற அவள் நாட்டாமை கையில் சிக்கி கற்பை இழந்து கர்ப்பமாக நிற்கும