உனக்கும் காலம் வரும்
1. சிங்கப்பூர் மக்கள் தூக்கத்திலிருந்து விழுத்து எழுந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. ஆனாலும் இந்தியர்கள் அச்சமயம் உறங்கிக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்காக இந்தியர்களை சோம்பேறிகள் என்று எண்ண வேண்டாம். 2. சூரியன் கிழக்கே முதலில் உதிப்பது சிங்கப்பூரில். அது இந்தியாவைவிட முன்னதாகவே. அதுதான் கால வித்தியாசம் . 3. உலகில் எல்லா உயிரினங்களும் அவரவரகளின் இயற்கை நிர்ணயத்தின்படி கால வித்தியாசத்திற்கு உட்பட்டவை. வாழ்க்கை என்பது ஒரு மாறுபட்ட காலத்தின் கோலம். 4. யானைக்கு நூறு வயது என்றால் பூனைக்கு பத்து வயது காலம். நத்தை நகர்கிறது. நாற்பது மைல் ஓடும் சிறுத்தையின் வேகம். அது அவரவர்களின் காலம். கடவுள் கொடுத்த திறமை. இயற்கை. 5. தாமரை காலையிலும் அல்லி மாலையிலும் பூக்கிறது. ஆறு மாத பயிர்களும் உண்டு. ஆறு வார செடிகளும் உண்டு. அது அவர்களின் காலம். 6. ஒருவருக்கு முப்பது வயதுமுடிந்தும் மணமாகவில்லை. இவருக்கு 20 வயதில் மணம் முடிந்துவிட்டது. 7. அவளுக்கு மணம் முடிந்து ஒரு வருடத்தில் தாயாகி விட்டாள். இவளுக்கு மணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும் மக்கட்பேறு இன்னமும் இல்லை. 8. அவன் இருபத்தி இ