நிலை இல்லாத நினைவுகள்
எண்ணங்கள் உதிப்பதற்கு கால அளவு இல்லை இடம் , நேரம் என்பது இல்லை கடந்த 85 வருட கால வாழ்க்கையை எண்ணிப்பார்த்தேன் வாழ்ந்த காலத்தின் ஏடுகளை புரட்டிப்பார்த்தேன் இதோ அதன் விளைவு ஒரு கவிதை இவெண்ணங்கள் எப்போது நிற்கும் ? எண்ணங்களின் உற்பத்தி என் மனம் , அம்மனம் எப்போது செயல் இழக்கும் ? மரணம் அல்லது மூளை இழப்பில்தான் பிறகு என் மனம் நிலைத்து இருப்பது எப்போது ? கடந்து வந்த ஆண்டுகளில் எத்தனைகோடி எண்ணங்கள் ? எங்கேயோ படித்த நினைவு! ஒரு தினத்தில் மனதில் உதிப்பது 50 ஆயிரம் எண்ணங்கள். பருவத்திற்கேற்ப பலவகை எண்ணங்கள். பசி , பாசம் , பற்று , பால்உணர்ச்சி சார்ந்த எண்ணங்கள். கட்டுப்படாத எண்ணங்களைக் கட்டுப்பதுத்த , எண்ணங்கள். முடிவாக நினைவு இல்லாத நிலைதான் எண்ணங்களின் முடிவோ! அதுதான் " சமாதி நிலையோ இல்லை சாந்தி நிலையோ" பீமாச்சார்