Posts

Showing posts from April, 2022

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

  கவிதையில் சிரிப்பு வருவது எப்படி என்று கனவில் கண்டேன். இதோ! வாய்விட்டுச் சிரிப்பு ,   வாய்க்குள்ளே சிரிப்பு , வெண்கலச் சிரிப்பு கேலிச் சிரிப்பு , கைகொட்டிச் சிரிப்பு கள் அருந்தியவனின் கேனச் சிரிப்பு காதலர்களின் கள்ளச் சிரிப்பு பால் மணம் மாறா குழந்தையின் கபடமற்ற சிரிப்பு ராக்ஷஸ சிரிப்பு , ராவணன் சிரிப்பு , கொலைகாரனின் கொலைவெறி சிரிப்பு பொய் சிரிப்பு , பேய் சிரிப்பு , பொக்கவாய் சிரிப்பு புன்சிரிப்பு , பொறாமை சிரிப்பு , காசு பணம் இன்றி ஒன்று மட்டுமே இருப்பது   சிரிப்பு , மானிடர்களுக்கு மட்டுமே அவன் கொடுத்த வரம் சிரிப்பு . காலையில் கடற்கரையில் கும்பலாக சங்கத்தில் பலவகை சிரிப்பு , ஆனந்த சிரிப்பு , ஆணவச்சிரிப்பு . கடைசியாக , ஆலயத்தில் சிலையாக நிற்கும் அந்த ஆண்டவனின் முகத்தில் தோன்றும் "மர்ம புன்சிரிப்பு"   பீமாச்சார்